பேங்காக், பிப்ரவரி 08 (பெர்னாமா) -- தாய்லாந்தில் பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் இன்று தங்களின் வாக்களிக்கும் கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில் வெறும் வார்த்தைகளில் அல்லாமல் செயல்களில் கவனம் செலுத்தும் ஒரு அரசாங்கத்தை விரும்புவதாக வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்தில் நீடிக்கும் அரசியல் நிலைத்தன்மையற்ற சூழலில், நாட்டின் பழமைவாத, முற்போக்கான மற்றும் மக்கள்வாத கட்சிகளுக்கு இடையிலான மும்முனைப் போட்டியில் எந்த ஒரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது
தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையே எல்லைப் பிரச்சனை தீவிரமாகி வரும் நிலையில் டிசம்பர் மத்தியில் பிரதமர் அனுதின் சன்விராகுல் திடீர் தேர்தலை அறிவித்த சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று கூறப்படுகிறது.
மற்றொரு நிலவரத்தில், ஜப்பானில் வரலாறு காணாத பனிப்பொழிவுக்கு மத்தியில் பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் தங்களின் வாக்களிக்கும் கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
இத்தேர்தலில் பிரதமர் சானே டகாய்ச்சிக்கு மகத்தான வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)