Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

பொது சேவை துறை அதிகாரிகள் பொதுவான கூற்றுகளை வெளியிடத் தடை

19/06/2025 04:58 PM

கோலாலம்பூர், 19 ஜூன் (பெர்னாமா) -- கொள்கைகள், திட்டங்கள் அல்லது எந்தவொரு விவகாரத்திலும் அரசாங்கம் மேற்கொண்ட முடிவு ஆகியவற்றை பாதிக்கக்கூடிய பொதுவான கூற்றுகளை பொது சேவை துறை அதிகாரிகள் வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ வெளியிடக்கூடாது.

பொதுச் சேவை துறை தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ வான் அஹ்மாட் டாஹ்லான் அப்துல் அசிஸ் கையொழுத்திட்ட 2025-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி கொண்ட, 1993-ஆம் ஆண்டு அரசாங்க அதிகாரிகளின் நன்நடத்தை மற்றும் கட்டொழுங்கு தொடர்பான விதிமுறைகள், துணை விதிமுறை 19(1)-இன் கீழ், பொது அறிக்கைகளை வெளியிடுவதற்கு தடை என்ற சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றறிக்கையின்படி, அரசாங்கத்தின் நற்பெயருக்கு அவமானம் விளைவிக்கும் அல்லது களங்கம் விளைவிக்கும் எந்தவொரு பொது கூற்றுகளையும் வெளியிடுவதற்கு பொது அதிகாரிகள் தடை செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு பொது அதிகாரி எந்தவொரு கொள்கை, திட்டம், அரசாங்க முடிவின் பலவீனம் போன்றவைக் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கக்கூடாது.

மேலும், அந்த அதிகாரி தாம் அல்லது வேறு எந்த நபரும் வெளியிட்ட எந்தவோர் அறிக்கை அல்லது கருத்தையும் பரப்பக்கூடாது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]