Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

வெளிநாட்டுப் பணியாளர்களின் இடங்களை 10,000 சிறைக்கைதிகள்  நிரப்புவர்

19/06/2025 07:31 PM

பெந்தோங், 19 ஜூன் (பெர்னாமா) -  வெளிநாட்டுப் பணியாளர்களின் இடங்களை 10,000 சிறைக்கைதிகள் நிரப்புவதை சிறைச்சாலை துறை இலக்காகக் கொண்டுள்ளதாக உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

உற்பத்தி, சேவை, தோட்டக் கலை மற்றும் கட்டுமானத் துறைகளில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க இம்முடிவு எடுகப்பட்டதாக அவர் கூறினார்.

சமூக மறுசீரமைப்பு திட்டம் (Community Rehabilitation Programme), கட்டாய முன்னிலை உத்தரவு (Compulsory Attendance Order, PKW), கைதிகளை நிபந்தனை அடிப்படையில் விடுவிக்கும் திட்டம், கார்ப்பரேட் ஸ்மார்ட் இன்டர்ன்ஷிப் திட்டம் ஆகிய திட்டங்களால் சிறைக்கைதிகளுக்கு மறுவாழ்விற்கு உதவுகின்றன.

இந்தத் திட்டங்கள் சிறைச்சாலைகளில் உள்ள சிறைக்கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்கவும் உதவியுள்ளன என்று சைஃபுடின் சுட்டிக்காட்டினார். 
 
இன்று பகாங், பெந்தோங் சிறைச்சாலையில் நடைபெற்ற 235-ஆவது சிறைச்சாலை தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)