Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

விற்பனை மற்றும் சேவை வரி மறுஆய்வு; அரசாங்கம் பரிசீலிக்கும்

19/06/2025 07:44 PM

பாங்கி, 19 ஜுன் (பெர்னாமா) -- ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்கள் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட இறக்குமதியாகும் பல பொருட்களுக்கான விற்பனை மற்றும் சேவை வரி- SST மறுஆய்வு செய்வதையும் அதன் நோக்கத்தை விரிவுபடுத்துவதையும் அரசாங்கம் மீண்டும் பரிசீலிக்கும் என்று துணை பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடிகூறினார். 

இந்தப் பழங்கள் உள்நாட்டில் உற்பத்தியாகாமல், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால், ஐந்து முதல் 10 விழுக்காடு வரை SST விதிப்பதில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

''உள்ளூர் பழங்களைப் பாதுகாப்பதே இலக்கு என்பது எனக்குத் தெரியும். ஆனால் நாங்கள் ஆப்பிள் உற்பத்தி செய்வதில்லை, லிமா மாண்டரின் பழத்தை உற்பத்தி செய்வதில்லை. எனவே நிதி அமைச்சும் பொருளாதார அமைச்சும் அந்த விசயத்தை ஆராய்ந்து வருகின்றன' என்று நான் நம்புகிறேன்'' என அவர் கூறினார். 

இன்று, சிலாங்கூர் பாங்கியில் நிகழ்ச்சி ஒன்றில்,கலந்து கொண்ட பின்னர், அம்னோ தலைவருமான அவர் செய்தியாளர் சந்திப்பில் அவ்வாறு தெரிவித்தார்

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)