Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

கல்விச் சட்டத் திருத்தம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்

19/06/2025 07:37 PM

லங்காவி, 19 ஜுன் (பெர்னாமா) -- மாணவர் இடைநிற்றலைக் குறைக்க, 17 வயது வரை அனைத்து இளைஞர்களும் கல்வி கற்பதைத் கட்டாயமாக்கும் வகையில், 1996 ஆம் ஆண்டு கல்விச் சட்டத்தின் திருத்தங்களை, கல்வி அமைச்சு, கே.பி.எம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்.

ஒவ்வொரு மாணவரும் இடைநிலைப்பள்ளி கல்வி முடியும் வரை தரமான கல்வியைப் பெறுவதற்கான உரிமையைப் பெறுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக அச்சட்டம் அமல்படுத்தப்பவிருப்பதை கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் விளக்கினார்.

"கட்டாயம் இடைநிலைப்பள்ளி  கொள்கையில் நாங்கள் மேற்கொண்ட திருத்தங்களை தாக்கல் செய்ய எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். இடைநிலைப்பள்ளிகளுக்கான கொள்கை நிறைவடைந்தால், கட்டாய பாலர்பள்ளி கல்விக் கொள்கையின் அவசியத்தை எங்கள் குழு ஆராய்ந்து வருகிறது," என்றார் அவர்.

ஆசியான் கல்வி அமைச்சர்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர்கள் வட்டமேசை மாநாட்டிற்குப் பிறகு (#EduRoundtables2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறினார்.

அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)