மாஸ்கோ, 19 ஜூன் (பெர்னாமா) -- இஸ்ரேலுடனான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஈரான் மாஸ்கோவிடம் இராணுவ உதவியை நாடியதாகக் கூறப்படுவதை ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் மறுத்துள்ளார்.
அதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவக் கூட்டணி உருவாகி இருப்பதாக எழுந்துள்ள ஆருடத்தையும் அவர் நிராகரித்தார்.
"எங்கள் நிபுணர்கள் புஷேரில் பணிபுரிகின்றனர். வணிகப் பயணங்களில் இருப்பவர்களையும் சேர்த்து 250 பேர் உள்ளனர். மொத்த எண்ணிக்கை 600 பேரை எட்டலாம். நாங்கள் அங்கிருந்து வெளியேறப் போவதில்லை. அது ஆதரவு இல்லையா? சரி, ஈரான் எங்களிடம் வேறு எந்த ஆதரவையும் கேட்கவில்லை," என்றார் அவர்.
அதேவேளையில், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம் அனைத்து தரப்பினரும் நலன் பெறுவர் என்றும் புதின் கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]