வாஷிங்டன் டி.சி., 19 ஜூன் (பெர்னாமா) -- ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதலுக்கு ஒப்புதல் அளிப்பதா இல்லையா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இதற்காக, கடைசி நிமிடம்வரை தாம் காத்திருக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
''யாரும் அதை விரும்பவில்லை. நானும் சண்டையிடப்படுவதை விரும்பவில்லை. ஆனால், சண்டையிடுவதற்கும் அவர்களிடம் அணு ஆயுதம் இருப்பதற்கும் இடையே தேர்வு ஒன்று இருந்தால், செய்ய வேண்டியதைச் செய்தாக வேண்டும். நாம் சண்டையிட தேவையில்லாமல் இருக்கலாம். மறந்துவிடாதீர்கள், நாங்கள் சண்டையிடவில்லை,'' என்றார் அவர்.
அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தமக்கு சில யோசனைகள் இருப்பதாகவும்.
எனினும் இறுதி நேரத்தில் அம்முடிவை எடுக்க விரும்புவதாகவும் டிரம்ப் கூறினார்.
கடந்த ஜூன் 13-ஆம் தேதி, ஈரானின் பல முக்கிய நகரங்கள், அரசாங்க உயர் மையம் மற்றும் அணு விஞ்ஞானிகளை குறிவைத்து ஈரானிய இராணுவம் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்தியதிலிருந்து பதற்றங்கள் அதிகரித்துள்ளன.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]