Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

உப்சி மாணவர்கள் விபத்து; பேருந்தின் நிலை திருப்திகரமாக உள்ளது

14/06/2025 05:32 PM

கோலாலம்பூர், 14 ஜூன் (பெர்னாமா) -- சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம் உப்சியை உட்படுத்திய விபத்தில் PLD 8892 என்ற பதிவு எண்ணைக் கொண்ட சுற்றுலாப் பேருந்தின் நிலை நிறைவளிக்கும் வகையில் இருப்பதாக தொடக்கக்கட்ட தொழில்நுட்ப அறிக்கைகள் கூறுகின்றன.

கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப விசாரணையின் அம்சங்களின் அடிப்படையில், விபத்துக்கு இயந்திர அமைப்பு செயலிழப்பை சுட்டிக்காட்டும் எந்த ஆதாரமும் இல்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

எனவே, மனிதர்கள், சாலை அமைப்புகள் போன்ற பிற காரணங்களால் விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அவர் கூறினார்.

பிரேக் நிலைமை, பிரேக் தேய்மானத் தன்மை, அதன் காற்றழுத்தம், டயரின் தன்மை மற்றும் ஸ்டேரிங் பயன்பாட்டின் இலக்குத்தன்மை ஆகியவற்றை உட்படுத்தி தொழில்நுட்ப விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இவை அனைத்தும் திருப்திகரமான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டதாக லோக் தெரிவித்தார்.

அதேவேளையில், பிரேக் காற்றழுத்தத்தில் எந்த குறையும் இல்லை எனவும் பிரேக் தேய்மானமும் இல்லை எனவும் கண்டறியப்பட்டதாக புஸ்பாகோமின் ஆரம்ப அறிக்கை கூறியது.

பேருந்து டரயர்களில் உள்ள பூக்கள் தடிமனாகவும் சாலைப் போக்குவரத்துத் துறையால் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு உட்பட்டு இருப்பதும் உறுதியானது.

அதிகாரிகளின் மேல் விசாரணைகளுக்கு உதவுவதற்கும், பொதுமக்களுக்கு துல்லியமான தகவல்களை வழங்குவதற்கும் இந்த ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கைகளை வெளியிடுவது அவசியம் என்று லோக் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)