கோலாலம்பூர், 20 ஜூன் (பெர்னாமா) -- இதனிடையே, அதிக மதிப்புடைய சொத்துக்களில் பெட்ரோனாஸ் கவனம் செலுத்துவதாக டான் ஶ்ரீ தெங்கு முஹமட் தௌஃபிக் தெரிவித்தார்.
மேலும், மூலதன ஒதுக்கீட்டை மேம்படுத்துவதற்கும் வருமானத்தை அதிகரிப்பதற்கும், நிலையான வளர்ச்சியை ஆதரிப்பதில் கவனம் செலுத்துவதற்கும் வியூக முறைகளைப் பெட்ரோனாஸ் செயல்படுத்தி வருவதாக அவர் கூறினார்.
''பெட்ரோனாஸ் இந்தத் துறையில் உள்ள இதர எரிசக்தி நிறுவனங்களைப் போலவே உள்ளது. நிறுவனத்தை மேம்படுத்துவது கட்டாயமாகும். இது எப்போதும் நடைமுறையில் இருக்கும். நிறுவனத்தை மேம்படுத்துவதற்கு அதிக கரிமங்களை உற்பத்தி செய்யும் சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களால் மாற்றப்பட வேண்டும், இது எரிசக்தி துறையின் கால வரம்பை நீட்டிக்க முடியும், நாங்கள் அதைச் செய்வோம்'', என்றார் அவர்.
சொத்துக்கள் அப்புறப்படுத்தப்படும் போது, நிறுவனத்தின் லாபங்கள் பாதிக்கப்பட்டால் பெட்ரோனாஸ் அவற்றை மாற்றும் என்று அவர் விளக்கினார்.
இதனால், லாபங்கள் நிலையானதாகவும் நிலையற்ற தன்மை எதிர்கொள்ளாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
''மேலும், அங்குதான் கெந்தாரி போன்ற நிறுவனங்கள் நுழைகின்றன. இந்த எலக்ட்ரான் உற்பத்தி மூலக்கூறுகளுடன் போட்டியிட்டால், லாபம் குறைவாக இருக்கலாம். ஆனால், அது நிச்சயமற்ற தன்மைக்கு குறைவாகவே வெளிப்படும்'' என்று அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)