உத்தரகாண்ட், 15 ஜூன் (பெர்னாமா) -- இந்தியா, அகமதாபாதில் விமான விபத்து நிகழ்ந்து மூன்றே நாள்கள் கடந்த நிலையில், இன்று உத்தரகாண்ட் மாநிலம் கவுரிகுந்த் எனும் வனப் பகுதியில், ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் எழுவர் உயிரிழந்தனர்.
இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள புனிதத் தலமான கேதார்நாத்துக்கு ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது இவ்விபத்து நிகழ்ந்தது.
இவ்விபத்தில் விமானி, 10 வயதுச் சிறுவன் உட்பட எழுவர் உயிரிழந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
சம்பவ இடத்தில், மீட்புப் படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்றாலும், அதற்கான விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மோசமான வானிலை காரணமாக இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)