Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

விமான விபத்தில்  உயிர் தப்பியவரை மோடி சந்தித்தார்

14/06/2025 04:17 PM

அகமதாபாத், 14 ஜூன் (பெர்னாமா) - ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்த மற்றும் காயமடைந்த ஒரே நபரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

உயிர் பிழைத்த ரமேஷ் அவசரகால உதவிக்கான கதவிற்கு அருகில் இருந்த 11A இருக்கையில் இருந்துள்ளார்.

அதோடு, உடைந்த அந்த கதவு வழியாக தப்பிக்க முடிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

காயமடைந்த ரமேஷ் மற்றும்  அங்கிருந்த பிறருடனும் மோடி சந்தித்து பேசினார்.

மதிய உணவு வேளையில், மருத்துவக் கல்லூரி விடுதி மீது விமானம் மோதியதில் அங்கிருந்த 24 பேரும் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)