குஜராத், 19 ஜூன் (பெர்னாமா) -- இந்தியா, அகமதாபாத் நகரில் உள்ள மருத்துவ கல்லூரி தங்கும் விடுதியின் மீது கடந்த வாரம் விழுந்து நொருங்கிய ஏர் இந்தியா 171 விமான விபத்தில் பலியானவர்களில் இதுவரை 202 பேர் மரபணு சோதனையின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அந்த எண்ணிக்கையில் சுமார் 169 பேரின் உடல்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக குஜராத் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை, புறப்பட்ட சில வினாடிகளில் அருகில் இருந்த மருத்துவ கல்லூரி வளாகத்தில் அவ்விமானம் விழுந்தது.
விபத்து நடந்த இடத்தில் மீட்புக் குழுவினர் அதிகமான சடலங்களை கண்டெடுத்தைத் தொடர்ந்து, மரண எண்ணிக்கை 274-ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானத்தின் 242 பயணிகளில் 241 பேர் உயிரிழந்ததை ஏர் இந்தியா நிறுவனம் முன்னதாக உறுதிப்படுத்தியிருந்தது.
அதில் பயணித்த ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]