Ad Banner
Ad Banner
 பொது

எஸ்.எஸ்.டி குறித்த கருத்துகளை அரசாங்கம் வரவேற்கின்றது 

30/06/2025 02:35 PM

புத்ராஜெயா, 30 ஜூன் (பெர்னாமா) -  எஸ்.எஸ்.டி எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரி வரம்பை விரிவுப்படுத்துவது தொடர்பிலான எந்தவொரு கருத்தையும் அரசாங்கம் வரவேற்கின்றது.

பெரும்பான்மையான மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத வகையில், எஸ்.எஸ்.டி-யை விரிவுபடுத்தும் முடிவு எடுக்கப்பட்டிருப்பதால  தெரிவிக்கப்படும் கருத்துகள் குற்றச்சாட்டுகளின்றி உண்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

"உதாரணமாக, இவ்விவகாரம் பரவுகின்றது. ஏனெனில், இருக்கின்ற சுதந்திரம் அவதூறுகளை ஏற்படுத்துவதாக மாறிவிட்டது. எனவே நமது சகோதர சகோதரிகள் அல்லது பிள்ளைகளை நம்புகிறேன். தயவு செய்து எனக்கு உண்மையைக் கூறுங்கள். மக்கள் விமர்சிப்பதில் எனக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. முடிந்தால், வரிகளே இருக்கக்கூடாது. அது சிறப்பாக இருக்கும். வரிகள் இல்லாத, பள்ளிக்கூடங்கள் இல்லாத ஒரு நாட்டை கற்பனை செய்து பாருங்கள்," என்றார் அவர்.

மின்சாரக் கட்டணம் தொடர்பாக மாணவர்கள் உட்பட சில தரப்பினர்களின் புகார்களுக்கு பதிலளித்த டத்தோ ஶ்ரீ அன்வார்..

பொதுப் பல்கலைக்கழகங்களுக்கு உண்மையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும், நியாயமற்ற கட்டணங்களை வசூலிக்கும் எந்தவொரு நிறுவனத்தின் நடவடிக்கையும்  சரி செய்யப்பட வேண்டும் என்றும்  கூறினார். 

அவதூறுகளையும் பரப்புவதற்குக் கருத்து சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்று பிரதமர் வலியுறுத்தினார்

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)