பேங்காக், 29 ஜூன் (பெர்னாமா) -- அண்டை நாடான கம்போடியாவுடன் ஏற்பட்டுள்ள எல்லைப் பிரச்சினையை கலைவதில் தாய்லாந்தின் தற்போதைய அரசாங்கம் தோல்வி கண்டிருப்பதால், அதன் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு பேங்காகில் பேரணி நடத்தப்பட்டது.
இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மேலும் கம்போடியா தலைவர் ஒருவருடன் Paetongtarn Shinawatra மேற்கொண்ட தொலைபேசி அழைப்பின் குரல் பதிவும் கசிந்து உள்ளதால் அவர் மீதான கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
அடுத்த மாதம் 38 வயதான Paetongtarn, நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்ள நேரிடலாம் என்று கணிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த பேரணி அவருக்கு மிகப் பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது.
"ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு நலனுக்காக" தற்போதைய அரசாங்கல் செயல்படவில்லை என்று பேரணியில் கலந்து கொண்ட பலர் தெரிவித்திருக்கின்றனர்.
ஆகவே தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெற்றும் கூட்டணி கட்சிகள் உடனடியாக விலக வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)