கோலாலம்பூர், 26 ஜூன் (பெர்னாமா) -- மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் தற்போது மலேசியாவின் பொருளாதார நிலைத்தன்மையில் குறுகிய கால தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
சண்டை நிலவும் மண்டலங்களில் தொடர் தாக்குதல்களால், தொடக்கத்தில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது.
எனினும், பேச்சுவார்த்தைகள் தொடங்கியப் பின்னர் குறையத் தொடங்கியதாக இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறினார்.
இன்று கோலாலம்பூரில் மலேசிய சிறு நடுத்தர நிறுவன, மேம்பாட்டு வங்கியின் 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியப் பின்னர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்சா செய்தியாளர்களிடம் பேசினார்.
சம்பந்தப்பட்ட வங்கியின் 21 கோடியே 10 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான இத்திட்டம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஆதரிக்கும் என்று அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)