ரியாத் 26 ஜூன் (பெர்னாமா) -- காற்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ அல்-நாசர் கிளப்பில் நீடித்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
39 வயதான அவர், சவூதி அரேபிய மண்ணிலேயே தொடர்ந்து விளையாடுவதற்கு தனது ஒப்பந்தத்தை நீட்டிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
2027-ஆம் ஆண்டு வரை அல்-நாசர் கிளப்பில் விளையாடுவதற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது.
இதுவரை, கிளப் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
ஆனால் முக்கியமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அல்-நாசர் கிளப்பில் இணைந்த ரொனால்டோ அன்று முதல் தமது திறமையால் அக்கிளப்பில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
42 வயதுடைய அவர் அங்கு விளையாடும் பட்சத்தில், கிளப்பிலும் தனிப்பட்ட சூழல்களிலும் புதிய சாதனைகளை படைக்க இது அவருக்கு பிரகாசமான வாய்ப்பாகும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)