Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

சாலை விபத்தில் முதியவர் பலி; இருவர் உயிர் தப்பினர்

26/06/2025 07:51 PM

கிரிக், 26 ஜூன் (பெர்னாமா) -- இன்று கிரிக் -  ஜெலி சாலையின் புஞ்சாக் தித்தி வங்சா R&R ஓய்வு தளத்திற்கு அருகே பத்து டன் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு முதியவர் உயிரிழந்தார்.

மேலும் இருவர் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் மூன்று பேர் பயணித்த புரோட்டோன் பெர்சோனா காரும் 10 டன் லாரியுன் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக பேராக், மலேசிய தீயணைப்பு மற்றூம் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு துணை இயக்குநர் சபாரோட்சி நோர் அஹ்மட் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் மதியம் மணி 1.02 அளவில் அழைப்பு கிடைத்ததாகவும் கிரிக் தீயணைப்பு மீட்பு நிலைய உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முன்னிருக்கையில் அமர்ந்திருந்த 70 வயதுடைய முதியவர் ஒருவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

பெர்சோனா காரை செலுத்தியவரும் பின்னிருக்கையில் அமர்ந்த பெண் ஒருவரும் சிறிய காயங்களுக்கு ஆளாகினர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)