Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

கப்பலில் தீ; நால்வர் பலி

25/06/2025 06:44 PM

ஜகார்த்தா, 25 ஜூன் (பெர்னாமா) -- இந்தோனேசியா, பத்தாம் தீவில் செம்பனை எண்ணெய் கொள்கலன்களை ஏற்றிச் செல்லும் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் உயிரிழந்தனர்.

மேலும் ஐவர் காயமடைந்தனர்.

அந்த கப்பலில் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

கப்பலில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொண்டு வந்த ஒரு தொழில்நுட்ப பணியாளர் உயிரிழந்திருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

​​உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல்  மணி 2.15 அளவில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் ஒன்பது பேர் பாதிக்கப்பட்டிருப்பதை போலீஸ் உறுதிப்படுத்தியிருக்கிறது.

காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)