கோலாலம்பூர், 12 ஜூன் (பெர்னாமா) - கிரிக் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் தொடர்புடைய பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர் நேற்று வாக்குமூலம் அளித்துள்ளதை அம்மாவட்டத்தின் இடைக்கால போலீஸ் தலைவர் டிஎஸ்பி முஹமட் ஃபிர்டாவுஸ் அப்துல்லா உறுதிப்படுத்தியுள்ளார்.
அப்பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர் நேற்றிரவு மணி 10.30-க்கு கிரிக் மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் அளிக்க வந்ததாக அவர் தெரிவித்தார்.
விபத்தில் சிக்கிய உப்சி மாணவர்கள் மற்றும் பல தரப்பினரை உட்படுத்தி மொத்தம் 18 சாட்சியாளர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் இசாம் நோர்டின் நேற்று தெரிவித்திருந்தார்.
கடந்த திங்கட்கிழமை திரெங்கானு ஜெர்தெவில் இருந்து பேராக் தஞ்சோங் மாலில் சென்றுக் கொண்டிருந்த பேருந்து பெரோடுவா அல்ஸா ரக காரின் பின்புறத்தை மோதி, சாலைத் தடுப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உப்சி மாணவர்கள் 15 பேர் மாண்டனர்.
அதில் 33 பேர் காயமடைந்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)