Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

பொதுப் போக்குவரத்து நிலையங்களுக்கு அருகில் புதிய வீடமைப்புத் திட்டங்கள் கட்டப்பட வேண்டும்

05/06/2025 07:43 PM

கோலாலம்பூர், 05 ஜூன் (பெர்னாமா) - பொதுப் போக்குவரத்து நிலையங்களுக்கு அருகில் மக்களுக்கான புதிய வீடமைப்புத் திட்டங்கள் கட்டப்பட வேண்டும் என்று
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பொதுப் போக்குவரத்து நிலையங்களுக்கு மேலே அல்லது  அருகில் புதிய பொது வீட்டுவசதித் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இது சேவையை விரிவான முறையில் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கான ஒரு படியாகும் என்று அவர் கூறினார்.

இத்தகைய வீட்டுவசதி மேம்பாட்டின் கருத்து குறைந்த வருமானம் கொண்ட குழுவிற்கு அதிக வீட்டுவசதியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மிகவும் நிலையான, கட்டமைக்கப்பட்ட நகர்ப்புற வாழ்க்கை முறைக்கு வழி வகுக்கும் என்று பிரதமர் ஆலோசனைக் கூறினார்.

பொதுப் போக்குவரத்து நிலையங்களுக்கு மேலே வீடுகளை உருவாக்குவதற்கான திட்டம் உள்ளது.

ஆனால் அதற்கு சில சட்ட திருத்தங்கள் தேவைப்படுவதால் தற்போது அது பரிசீலனை அளவில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மெனாரா பிரசரானாவில் இன்று நடைபெற்ற மடானி மலேசிய ஆய்வாளர்கள் மன்ற கூட்டத்தில் பேசிய நிதியமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)