புத்ராஜெயா, 19 ஜூன் (பெர்னாமா) -- பேரிடர் நிர்வகிப்பிற்கான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மலேசியாவும் ரஷ்யாவும் இவ்வாண்டு இறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மலேசியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பேரிடர் நிர்வகிப்புத் துறையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான தளமாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்படும் என்று, துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி கூறினார்.
தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம், நட்மா மற்றும் ரஷ்ய பேரிடர் நிர்வகிப்பு அமைச்சு, எமர்கோம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பின் அதிகாரப்பூர்வ கட்டமைப்பாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமையும் என்று அவர் தெரிவித்தார்.
கூட்டுப் பயிற்சி, நிபுணத்துவப் பகிர்தல் உட்பட முறையான மற்றும் விரிவான அவசரகால பதில் ஆகியவற்றின் அடிப்படையில் அது அமையும் என்று டாக்டர் சாஹிட் ஹமிடி மேலும் விவரித்தார்.
''நாங்கள் நல்ல ஓர் உறவை ஏற்படுத்தியுள்ளோம். மேலும் 'ஸ்மார்ட்' (மலேசிய தேடல் மற்றும் மீட்பு சிறப்பு குழு) மற்றும் RUS-03 குழு இடையில் தேடல் மற்றும் மீட்புப் பயிற்சியை கூட்டாக நடத்தவுள்ளோம்,'' என்றார்
மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொண்டிருக்கும் ரஷ்ய பேரிடர் நிர்வகிப்பு அமைச்சர் அலெக்சாண்டர் குரென்கோவ் உடன் இன்று, புத்ராஜெயா, பெர்டானா புத்ராவில் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் துணைப் பிரதமர் அவ்வாறு குறிப்பிட்டார்.
சபா மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதில் மத்திய மற்றும் மாநில தேசிய முன்னணி தலைமைத்துவத்திற்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக சில தரப்புகள் கூறுவதை அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி மறுத்துள்ளார்.
இதனிடையே, கூட்டணித் தலைமைத்துவத்திற்கு கொள்கை அடிப்படையில் எந்த வேறுபாடுகளும் இல்லை என்றும், மாறாக சபா மாநிலத் தேர்தலுக்கான தயாரிப்பில் சில மாற்றங்களை மட்டுமே செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
இன்று, சிலாங்கூர் பாங்கியில் நிகழ்ச்சி ஒன்றில்,கலந்து கொண்ட பின்னர், அம்னோ தலைவருமான டாக்டர் அஹ்மட் சாஹிட் செய்தியாளர் சந்திப்பில் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)