மாஸ்கோ, 05 ஜூன் (பெர்னாமா) -- தேவைப்பட்டால் போர்க்களத்தில் உக்ரேனை ரஷ்யா தோற்கடிக்கும் என்றும், அரசதந்திரத்தின் மூலம் போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யா தயாராக இருப்பதாகவும் அதன் அதிபர் விளாடிமிர் புதின் நேற்று கூறினார்.
"முதலாவதாக, ஒன்று மற்றொன்றை விலக்குவதில்லை. முழு டான்பாஸ் வட்டாரத்தையும் கட்டுப்படுத்துவதும், ஓர் ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல. நீங்கள் ஏன் அவர்கள் என்று கருதுகிறீர்கள்? ரஷ்யப் படைகள் மோதல் எல்லை வரையிலும் வருகின்றனர். ரஷ்யப் படைகள் நெருங்காத இடமே இல்லை. இன்று, உக்ரேனின் ஆயுதப் படைகளும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை, பேரழிவு தரும் ஆள் பற்றாக்குறை ஆகும்," என்றார் அவர்.
ரஷ்யாவின் வருடாந்திர பொருளாதார கலந்துரையாடலில் கலந்து கொண்டு அவர் செய்தியாளர்களிடம் அதனை கூறினார்.
எனினும், போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமானால் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இல்லாத உக்ரேனின் கிழக்கு டொன்பாஸ் வட்டாரத்தின் எஞ்சிய பகுதியை அது ஒப்படைக்க வேண்டும் எனும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதற்கான எந்தவொரு அறிகுறியையும் புதின் வெளிப்படுத்தவில்லை.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]