புது டெல்லி, 17 பிப்ரவரி பெர்னாமா) -- ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதல்களின் காரணமாக, இந்திய விமான நிறுவனமான இண்டிகோ, வரும் மார்ச் 28-ஆம் தேதி வரை, நான்கு அனைத்துலக விமான பயணங்களின் ரத்து நடவடிக்கையை நீட்டித்துள்ளது.
திபிலிசி, அல்மாட்டி, பாகு மற்றும் தாஷ்கண்ட்-க்கான பயணங்களை, முன்னதாக, கடந்த ஜனவரி மாத இறுதியிலிருந்து பிப்ரவரி 28-ஆம் தேதி வரை அவ்விமான நிறுவனம் ரத்துச் செய்திருந்தது.
ஈரான் வான்பரப்பில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு தங்களின் முன்னுரிமை என்று IndiGo நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், நடப்பு சூழ்நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் அதேவேளை, இடையூறுகளைக் குறைக்கும் பொருட்டு பயண அட்டவணைகளை தமது தரப்பு மதிப்பாய்வு செய்ய விருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
இண்டிகோ உட்பட ஏர் இந்தியா நிறுவனமும் ஈரானிய வான்வெளியைப் பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளன.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]