புது டெல்லி, பிப்ரவரி 03 (பெர்னாமா) -- அமெரிக்காவும் இந்தியாவும் புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் உடன்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்திருக்கிறார்.
இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் வழி ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவிருப்பதாக அவர் கூறினார்.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் அதே வேளையில் அமெரிக்காவிலிருந்தும் தேவை ஏற்பட்டால் வெனிசுலாவிலிருந்தும் அதிக அளவில் எண்ணெய் வாங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாகவும் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.
இதனிடையே இந்தியா மீதான பரஸ்பர வரி 25 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகக் குறைக்கப்படும் என்றும் அவர் தமது TRUTH SOCIAL சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
50,000 கோடி டாலருக்கும் அதிகமான அமெரிக்க எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல அமெரிக்கப் பொருள்களை வாங்குவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தாகவும் அந்த பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்பெறச்செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)