கியோங்ஜூ, 31 அக்டோபர் (பெர்னாமா) -- ஆசிய - பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு ஏபெக் உறுப்பு நாடுகள் தங்கள் தளத்திற்கு அப்பாற்பட்டு லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதாரத்தில் அதிக பங்கேற்பை ஊக்குவிக்கும் பாலமாகச் செயல்பட வேண்டும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.
தென் கொரியா கியோங்ஜூவில் நடைபெறும் ஏபெக் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்தின் முதல் நாளான இன்று நடைபெற்ற கலந்துரையாடல் சந்திப்பில் அன்வார் இப்ராஹிம் அத்தகவலைப் பகிர்ந்து கொண்டார்.
"லத்தீன் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதாரங்களின் அதிக பங்கேற்பு முறையான ஈடுபாடுகள் மூலம் ஏபெக் திட்டத்தை மிகவும் கணிசமான உருமாறும் உள்ளடக்கிய மற்றும் உண்மையிலேயே தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாக மாற்றும். இது உலகின் வடக்கு மற்றும் தெற்கு வட்டாரங்கள் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் ஒரு சமமான பொருளாதார கட்டமைப்பை நோக்கிய பாதையை அமைக்கும்." என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இத்தளம் தம்மை ஒரு முன்னோடியாக நிரூபித்துள்ளதோடு தன்னார்வ மற்றும் கட்டாயமற்ற ரீதியில் உலக பொருளாதார விதிமுறைகளை வடிவமைப்பதில் இது ஊக்கமளித்து வருவதாக அன்வார் சுட்டிக்காட்டினார்.
உலக வர்த்தக அமைப்பு உலக வர்த்தக அமைப்புக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட பன்முக ஒத்துழைப்பு முயற்சிகளுக்கு ஏபெக் முன்னோடியாக இருந்து வர்த்தக வசதிக்கான ஆரம்பகால கட்டமைப்புகளை உருவாக்கியது.
மேலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வரிகளைத் தன்னார்வமாகக் குறைப்பதிலும் அது உலகிற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தது.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)