ரியாத், 27 ஜூன் (பெர்னாமா) -- ரொனால்டோவின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு பதில் கிடைத்துள்ளதை அல் நாசர் அதன் X தளத்திலும் பகிர்ந்துள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சில நிமிடங்களுக்கு முன்பு, ரொனால்டோ கடற்கரையில் நடந்து செல்வதைக் காட்டும் ஒரு சிறிய காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டு அதில் "என்றென்றும் அல் நாசர்" என்று ரொனால்டோ கூறுவது போல உள்ளது.
2027-ஆம் ஆண்டு வரை அக்கிளப்பில் விளையாடுவதற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அல்-நாசர் கிளப்பில் இணைந்த ரொனால்டோ அன்று முதல் தமது திறமையால் அக்கிளப்பில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
25 கோல்களுடன், லீக்கில் அதிக கோல் அடித்த வீரராக திகழ்ந்தாலும், அல் நாசருடன் ரொனால்டோ இன்னும் எந்த பெரிய கிண்ணத்தையும் வெல்லவில்லை.
42 வயதான அவர் அக்கிளப்பில் தொடர்ந்து விளையாடும் பட்சத்தில், அதில் தனிப்பட்ட சூழல்களிலும் புதிய சாதனைகளை படைக்க அது பிரகாசமான வாய்ப்பாகும்.
காற்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ அல் நாசர் கிளப்பில் நீடித்திருப்பார் என்பது உறுதியாகி உள்ளது.
சவூதி அரேபிய மண்ணிலேயே அவர் தொடர்ந்து விளையாடுவதற்கான ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அக்கிளப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)