இஸ்கண்டார் புத்ரி, 27 ஜூன் (பெர்னாமா) -- eCOSS எனப்படும் சமையல் எண்ணெய் விலையை நிலைப்படுத்தும் செயல்முறை பயன்பாட்டை இறுதி பயனீட்டாளர் நிலைக்கு விரிவுப்படுத்தும் முதல் மாநிலமாக ஜோகூர் விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உதவித் தொகை கிடைக்கும் சமையல் எண்ணெயின் ஒவ்வொரு பரிவர்த்தனையையும் இலக்கவியல் முறையில் பதிவு செய்ய அச்செயல்முறை அனுமதிக்கும் என்று உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிஸான் முஹமட் அலி தெரிவித்தார்.
இன்று, ஜோகூரில் 2025 கே.பி.டி.என் தெற்கு மண்டல கண்காட்சி மற்றும் மலேசியப் பொருட்களை வாங்கும் பிரச்சாரத்தைத் தொடக்கி வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதனைக் கூறினார்.
பாக்கெட் சமையல் எண்ணெய், பொட்டலமிடுபவர்கள் முதல் மொத்த விற்பனையாளர்கள், மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் வரை செல்லும் பயணத்தைக் கண்காணிக்க, eCOSS உருவாக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)