புத்ராஜெயா, 25 ஜூன் (பெர்னாமா) - முன்னாள் பிரதமடர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தொடர்புடைய, 17 கோடி ரிங்கிட் மீதான உரிமையைப் பறிமுதல் செய்வதற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்வதற்கு, அரசு தரப்பு துணை வழக்கறிஞர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அந்த விண்ணப்பம் அடுத்து இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்யப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.
மேலும், நாட்டின் ஒன்பதாவது பிரதமருக்கு எதிரான குற்றவியல் குற்றச்சாட்டுகள் குறித்து, அரசு தரப்பு துணை வழக்கறிஞரின் பதிலுக்காக தமது தரப்பு இன்னும் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
2009ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டம் செக்ஷன் 36 உட்பிரிவு ஒன்றின் கீழ், சொத்து அறிவிப்பை வெளியிடுமாறு பெரா நாடாளுமன்ற உறுப்பினருமாகிய அவருக்கு உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அசாம் பாக்கி குறிப்பிட்டார்.
கடந்த மார்ச் மாதத்திலிருந்து, ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளின் விசாரணைக்கு உதவ மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் பலமுறை வருகைப் புரிந்துள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)