உலகம்

ஓமானில் வெள்ளம்; 17 பேர் மாண்டனர்

16/04/2024 07:49 PM

ஓமான், 16 ஏப்ரல் (பெர்னாமா) -- ஓமானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 17 பேர் மாண்டனர்.

காணாமல் போனவர்களைத் தேடி மீட்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

துபாய் உட்பட அரேபியத் தீபகற்பத்தின் பிற பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் துரிதப்படுத்தி வருகின்றனர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்காக அந்நாட்டின் அரச போலீஸ் படை மற்றும் இராணுவம் களமிறங்கியுள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)