உலகம்

கிழக்கு பஞ்சாப்பில் ஏற்பட்ட சாலை விபத்தில் குறைந்தது இருவர் பலி

15/04/2024 08:39 PM

இஸ்லாமபாட், 15 ஏப்ரல் (பெர்னாமா) -- பாகிஸ்தான், கிழக்கு பஞ்சாப் மாகாணத்திலுள்ள சக்வால் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் குறைந்தது இருவர் உயிரிழந்தனர்.

மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அம்மாவட்டத்தின் கல்லார் கஹார் பகுதிக்கு அருகிலுள்ள சர் கலன் பகுதியில் பஸ் ஒன்று ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது விபத்துக்குள்ளானதாக நெடுஞ்சாலை ரோந்து போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரும் மீட்புக் குழுவினரும் காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர்.

உயிரிழந்தவர்களின் சடலங்களும் அதே மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டன.

காயமடைந்தவர்களில் ஐவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக சக்வால் போலீஸ், டிசிபி குராத்துலைன் மாலிக் தெரிவித்தார்.

பேருந்தை அதன் ஓட்டுநர் வேகமாகச் செலுத்தியதால் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீஸ் தரப்பு தெரிவித்தது. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)