தாவாவ், 08 ஏப்ரல் (பெர்னாமா) -- நேற்று, சபா, குனாக் சம்பவத்தில் இடது கண்ணில் சுடப்பட்ட மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனமான ஏ.பி.எம்.எம்-இன் உறுப்பினருக்கு அக்கணில் நிரந்தர பார்வை இழப்பு ஏற்பட்டது.
45 வயதுடைய கடல்சார் Bintara Muda சைனால் அபாட் கொமெலின் கண் நரம்பில் துப்பாக்கி தோட்டாப் பாய்ந்ததைத் தொடர்ந்து அவருக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளதாக மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் தலைமை இயக்குநர் கடல்சார் லக்சமானா டத்தோ ஹமிட் முஹமட் அமின் தெரிவித்தார்.
நேற்று காலை 8.30 மணிக்குஅளவில் குனாக் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டினால் மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் அலமாக்க அதிகாரிகள் இருவர் காயமடைந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
Pagar Laut சிறப்பு சோதனை நடவடிக்கையின்போது நீல நிற படகு ஒன்றை அமலாக்க அதிகாரிகள் பயணித்த படகு நெருங்கியபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை