கோலாலம்பூர், 08 ஏப்ரல் (பெர்னாமா) -- இவ்வாண்டு நோன்புப் பெருநாளை முன்னிட்டு இன்று ஏப்ரல் 8-ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான கே.எல்.ஐ.ஏ-இல் மொத்தம் 1,035 விமானப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதில் முதலாவது விமான முனையத்தில் 576 பயணங்களும் இரண்டாவது விமான முனையத்தில் 459 பயணங்களும் மேற்கொள்ளப்பட்டதாக கே.எல்.ஐ.ஏ-இன் செயல்முறை தலைமை நிர்வாகி அப்துல் ஹஸ்மான் அப்துல் முஹிமின் தெரிவித்தார்.
அதேபோன்று முதல் முனையத்தில் 84,873 மற்றும் இரண்டாம் முனையத்தில் 71,884 என்ற நிலையில், இவ்விரு விமான முனையங்களிலும் சுமார் ஒரு லட்சத்து 56,757 பேர் பயணம் செய்திருப்பர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
விமானப் பயணத்திற்கான தேவை அதிகமாக இருப்பதால், இவ்வாண்டு நோன்புப் பெருநாளுக்கு, கூடுதலாக 500 விமானப் பயணங்கள், சில விமான நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இப்பெருநாள் காலத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும் தமது தரப்பு சிறந்த சேவையை வழங்கும் என்றும் அப்தும் ஹம்சான் நம்பிக்கைத் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை