பொது

மகளைக் கற்பழித்த குற்றத்தை ஆடவர் ஒப்புக்கொண்டார்

29/03/2024 07:10 PM

ஈப்போ, 29 மார்ச் (பெர்னாமா) -- கடந்த பிப்ரவரி மாதம், பத்து காஜா, கம்போங் ஶ்ரீ ரஹ்மாட்டில் தமது 19 வயது மகளை கற்பழித்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை வேலை இல்லாத ஆடவர் ஒருவர் ஒப்புக்கொண்டார்.

இன்று ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில், நீதிபதி நோரிதா முஹமட் அர்டானி முன்னிலையில் வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டை 38 வயதான அந்த ஆடவர் ஒப்புக் கொண்டார்.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 376 உட்பிரிவு 3-இன் கீழ், ஆறு சிறுவர்களுக்கு தந்தையான அந்த ஆடவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

மார்ச் 20-ஆம் தேதி, அதே இடத்தில் பாதிக்கப்பட்டவர் மீது பாலியல் துன்புறுத்தல் செய்யும் நோக்கத்துடன் வன்முறையைப் பயன்படுத்தியதால், குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 354-இன் கீழும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது பிரப்படி அல்லது இவற்றில் இரண்டு தண்டனைகளாக வழங்கப்படலாம்.

இவ்வழக்கின் கூடுதல் தகவல்களை கண்டறிய, ஏப்ரல் 17-ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)