கோலாலம்பூர், 11 ஜூன் (பெர்னாமா)-- நேற்று ஜூன் 10-ஆம் தேதி மேற்கொண்ட கொவிட்-19 பரிசோதனையின் முடிவின்படி பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீஃபாடில்லா யூசோஃப்புக்கு கொவிட் தொற்று கண்டிருப்பது உறுதிபடுத்தப் பட்டிருக்கிறது.
இருப்பினும், பொதுப் பணித்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர் ஃபாடில்லாவின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன் பொருட்டு, சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பேரில் அவர் தமது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.
தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில், அமைச்சின் அனைத்து நடவடிக்கைகளும் சீராக இயங்குவதை தாம் தொடர்ந்து கண்காணிக்கவிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை