கடூனா, 08 மே (பெர்னாமா) -- சுமார் இரண்டு மாதங்களாக ஆயுதமேந்திய கடத்தல்காரர்களின் பிடியில் இருந்த வடமேற்கு நைஜீரியாவில் கடுனா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் வெள்ளிக்கிழமை மீண்டும் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்திருக்கின்றனர்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தை கண்ணீருடனும் பாடியும் இவர்கள் கொண்டாடி இருக்கின்றனர்.
கடந்த மார்ச் 11-ஆம் தேதி ஆயுதமேந்திய ஆடவர்களால் வனவியல் கல்லூரியிலிருந்து 39 மாணவர்கள் கடத்தப்பட்டனர்.
அவர்கள் 10 பேர் விடுவிக்கப்பட்ட வேளையில் மேலும் இருவர் தப்பியோடி இருக்கின்றனர்.
எஞ்சிய 27 பேர் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளான நிலையில் இன்று மீண்டும் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்திருக்கின்றனர்.
-- பெர்னாமா
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை