உலகம்

கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து குடும்பத்துடன் இணைந்த மாணவர்கள்

08/05/2021 02:39 PM

கடூனா, 08 மே (பெர்னாமா) -- சுமார் இரண்டு மாதங்களாக ஆயுதமேந்திய கடத்தல்காரர்களின் பிடியில் இருந்த வடமேற்கு நைஜீரியாவில் கடுனா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் வெள்ளிக்கிழமை மீண்டும் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்திருக்கின்றனர்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தை கண்ணீருடனும் பாடியும் இவர்கள் கொண்டாடி இருக்கின்றனர்.

கடந்த மார்ச் 11-ஆம் தேதி ஆயுதமேந்திய ஆடவர்களால் வனவியல் கல்லூரியிலிருந்து 39 மாணவர்கள் கடத்தப்பட்டனர்.

அவர்கள் 10 பேர் விடுவிக்கப்பட்ட வேளையில் மேலும் இருவர் தப்பியோடி இருக்கின்றனர்.

எஞ்சிய 27 பேர் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளான நிலையில் இன்று மீண்டும் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்திருக்கின்றனர்.

-- பெர்னாமா