ஜார்ஜ்டவுன், 11 ஏப்ரல் (பெர்னாமா) -- பினாங்கு தெற்கு நீரணைப் பகுதியின் கடல் பரப்பை நிரப்பும் திட்டம் மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் நிர்வாக திட்டத்தின் அனுமதி பெற்றவுடன் அதற்கான முதல் கட்ட பணி மே மாதம் இறுதியில் தொடங்கப்படும் என்று முதலாவது துணை முதலமைச்சர் டத்தோ அஹ்மாட் சக்கியுடின் ரஹ்மான் தெரிவித்திருக்கிறார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை பினாங்கில், அத்திட்டத்தின் கட்டுமான தளத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
-- பெர்னாமா
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை