பொது

ஐந்து மாடி கட்டடத்திலிருந்து கீழே விழுந்த ஆடவர்

06/03/2021 09:21 PM

சிரம்பான், 06 மார்ச் (பெர்னாமா) -- சிரம்பான், ஐந்து மாடி கட்டடத்திலிருந்து 37 வயதுடைய உள்ளூர் ஆடவர் தவறி விழுந்தார்.

இது குறித்த தகவல் கிடைத்தவுடன் சிரம்பான் 2 தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்தனர்.

இருப்பினும், அந்த ஆடவரை மீட்புப் படையினார் குறிப்பிட்ட நேரத்தில் காப்பாற்ற இயலவில்லை.

தற்போது அந்த ஆடவரின் நிலைமை மோசமாக இருக்கும் நிலையில் சிரம்பான் துவாங்கு ஜபார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.

-- பெர்னாமா