ஜார்ஜ்டவுன், பினாங்கு, 14 ஜனவரி (பெர்னாமா) -- நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு பிகேபி அமல்படுத்தப்பட்டுள்ள பினாங்கு மாநிலத்தில், பொங்கல் திருநாள் பெரிய அளவில் கலைகட்டவில்லை.
கொவிட்-19 பெருந்தொற்றின் தாக்கத்தால் ஆலயங்கள் திறப்பதில் அனுமதி இல்லை என்று கூறியதால், பெரும்பாலான குடும்பங்கள் வீட்டிலேயே பொங்கலை கொண்டாடியிருக்கின்றனர்.
இதில், மௌன்ட் எர்ஸ்கின் பகுதியில் வசிக்கும், பினாங்கு மாநில இந்து தர்ம மாமன்றத்தின் துணைத் தலைவர் A. கிருஷ்ணன் குடும்பத்தினர், ஆண்டுதோறும் சொந்த பந்தங்களோடு கொண்டாடும் மாட்டு பொங்கலைக் கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகக் கூறுகின்றார்.
''சென்ற ஆண்டு நானும் என் குடும்பமும் என் தங்கையின் வீட்டில் மாட்டு பொங்கலைக் கொண்டாடினோம். என் தங்கையின் வீட்டில் சுமார் 50 குடும்ப உறுப்பினகள் ஒன்றிணைந்து மாட்டு பொங்கலை விமரிசையாகக் கொண்டாடினோம். இந்த ஆண்டு அந்த வாய்ப்பு கிட்டவில்லை. எனினும், இந்நிலை கூடிய விரைவில் மாற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்,'' என்று ஏ, கிருஷ்ணன் கூறினார்.
கட்டுப்பாட்டு உத்தரவுகளினால், இதர மாநிலங்களில் தங்கியிருக்கும் பிள்ளைகள் வீட்டு திரும்ப முடியாதது வருத்தமளித்தாலும், அங்கு அவர்கள் பாதுக்காப்புடன் இருப்பதே முக்கியம் என்று கிருஷ்ணன் தெரிவித்தார்.
-- பெர்னாமா
எங்களைப் பற்றி
Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia
Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com
பிரிவுகள்
• பொது
• அரசியல்
• உலகம்
• சிறப்புச் செய்தி
• விளையாட்டு
காப்புரிமை