புத்ராஜெயா, 22 அக்டோபர் (பெர்னாமா) -- நாட்டில், கொவிட்-19 நோயினால், இன்று மேலும் ஐவர் பலியாகி இருப்பதைத் தொடர்ந்து பலியானோரின் மொத்த எண்ணிக்கை, 204-ஆக அதிகரித்திருக்கிறது.
அதோடு, இன்று நண்பகல் 12 மணி வரையில் 847 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகியதுடன் ஆறு புதிய தொற்றுகளும் அடையாளம் காணப்பட்டிருப்பதாக, சுகாதார தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.
இன்று பதிவு செய்யப்பட்ட புதிய கொவிட்-19 சம்பவங்களில், 842 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியது என்றும், எஞ்சிய ஐந்து சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்களை உட்படுத்தியது என்றும், அவர் கூறினார்.
அதில், சபாவில் மிகவும் அதிகமாக, அதாவது 578 சம்பவங்கள் பதிவாகிய நிலையில், சிலாங்கூரில், 137 சம்பவங்களும், நெகரி செம்பிலானில் 38 சம்பவங்களும் லாபுவானில் 29 சம்பவங்களும் பதிவாகி இருக்கிறது.
இன்று மேலும் 486 பேர் இந்நோயிலிருந்து குணமடைந்திருக்கின்றனர்.
அதோடு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் 90 பேரில் 29 பேருக்கு சுவாச உதவிக் கருவி பொருத்தப்பட்டிருக்கிறது.
-- பெர்னாமா
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை