கோலாலம்பூர், 30 ஜூன் (பெர்னாமா) -- கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பெர்சத்து கட்சியின் ஆண்டு பொதுப் பேரவை, வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி நடத்தப்படும்.
கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் அணிகளின் பொதுப் பேரவை, ஒரு நாள் முன்னதாக, செப்டம்பர் 26-ஆம் தேதி நடத்தப்படும் என்று, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் அதன் பொதுச் செயலாளர், டத்தோ ஶ்ரீ ஹம்சா சைனுடின் அறிவித்திருக்கிறார்.
இதனிடையே, பெர்சத்து கிளையின் கூட்டங்கள் அனைத்தும், வரும் ஜூலை 10-ஆம் தேதி தொடங்கி, 26-ஆம் தேதி வரையில் மீண்டும் தொடங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
தொகுதி நிலையிலான கூட்டங்கள், ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடத்தப்படும்.
இளைஞர் அணிக்கான தொகுதி நிலையிலான கூட்டம், ஆகஸ்ட் 15-ஆம் தேதியும், மகளிர் அணிக்கான தொகுதி நிலையிலான கூட்டம், ஆகஸ்ட் 16-ஆம் தேதியும் நடைபெறும் என்று ஹம்சா தெரிவித்திருக்கிறார்.
-- பெர்னாமா
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை