பொது

ஜூன் 10ஆம் தேதி முதல் படப்பிடிப்பு நடவடிக்கைகளுக்கு அனுமதி

02/06/2020 05:17 PM

புத்ராஜெயா,  2 ஜூன் (பெர்னாமா) -- ஜூன் 10-ஆம் தேதி முதல் திரைப்படம், நாடகம் மற்றும் விளம்பரம் ஆகிய துறைகளின் படப்பிடிப்பு நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படிருப்பதாகவும் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார். 

ஜூன் 10-ஆம் தேதி முதல், படப்பிடிப்பு மற்றும் இதர படப்பிடிப்பு தொடர்புடைய நடவடிக்கைகள் செயல்பட நாங்கள் முடிவு செய்துள்ளோம். இருப்பினும், ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட செயல்பாட்டு தர விதிமுறை எஸ்.ஓ.பி-யைப் பின்பற்றியே இப்படப்பிடிப்பு நடவடிக்கைகள் செயல்பட வேண்டும்.'' என்று அவர் தெரிவித்தார்.

செவ்வாய்கிழமை, புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் இஸ்மாயில் சப்ரி இந்த தகவல்களை பகிர்ந்து கொண்டார். 

-- பெர்னாமா