பொது

பேருந்தின் பின்புறம் மோதி லாரி விபத்துக்குள்ளானது

30/05/2020 07:48 PM

கோலா சிலாங்கூர், 30 மே (பெர்னாமா) -- கோலா சிலாங்கூரில் உள்ள கம்போங் தெலுக் பியாயில் இன்று காலை 8 மணி அளவில் லாரி ஒன்று பேருந்தின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.

அந்த லாரியில் பயணித்த  கணவன் -மனைவி தம்பதியர் சுமார் 30 நிமிடங்கள் வரை உள்ளேயே சிக்கிக் கொண்டதாகவும், கடுமையான காயங்களுக்கு ஆளாகியிருப்பதாகவும்  தீயணைப்புப் படை பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

பழங்களை ஏற்றி வந்த அந்த லாரி, வட தீபகற்பத்திற்கு பயணம் செய்ததாக நம்பப்படுகிறது. இச்சாலை விபத்தில், 30 வயதிற்குட்பட்ட அந்தத் தம்பதியருக்கு கால் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர்களின் நான்கு வயது மகள் சொற்ப காயங்களுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

இதனிடையே, கட்டுப்பாட்டை இழந்ததால் அந்த லாரி பேருந்தின் பின்புறம் வேகமாக மோதியதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விபத்துக்குள்ளான லோரியிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட அவர்கள் அனைவரும் தஞ்சோங் காராங் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

-- பெர்னாமா