உலகம்

ஆம்பன் சூறாவளியால் இந்தியாவிலும் வங்களாதேசத்திலும் 84 பேர் பலி

22/05/2020 03:50 PM

கொல்கத்தா, 22 மே (பெர்னாமா) -- இந்தியாவிலும் வங்களாதேசத்திலும் வீசிய ஆம்பன் சூறாவளியால் குறைந்தது 84 பேர் பலியாகி இருக்கின்றனர். 

கொல்கத்தாவில் ஏற்பட்டிருக்கும் மின்சாரத் தடையினாலும், தொலைத்தொடர்புத் துண்டிப்பாலும் பெரும்பாலான மக்கள் அவதியுற்று வருகின்றனர். 

கொவிட்-19 கிருமித்தொற்று அதிகரித்து வரும் வேளையில், சூறாவளியும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

கரையோரக் கிராமங்களில் வசிக்கும் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

கூட்டம் நிரம்பி வழியும் நிவாரண முகாம்களில் கொவிட்-19 கிருமி மிக எளிதாகப் பரவக்கூடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.

-- பெர்னாமா