கொல்கத்தா, 22 மே (பெர்னாமா) -- இந்தியாவிலும் வங்களாதேசத்திலும் வீசிய ஆம்பன் சூறாவளியால் குறைந்தது 84 பேர் பலியாகி இருக்கின்றனர்.
கொல்கத்தாவில் ஏற்பட்டிருக்கும் மின்சாரத் தடையினாலும், தொலைத்தொடர்புத் துண்டிப்பாலும் பெரும்பாலான மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
கொவிட்-19 கிருமித்தொற்று அதிகரித்து வரும் வேளையில், சூறாவளியும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கரையோரக் கிராமங்களில் வசிக்கும் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கூட்டம் நிரம்பி வழியும் நிவாரண முகாம்களில் கொவிட்-19 கிருமி மிக எளிதாகப் பரவக்கூடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.
-- பெர்னாமா
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை