Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் நன்னடத்தை அடிப்படையில் நிபந்தனையில் இன்று விடுவிக்கப்பட்டார்

11/05/2026 07:50 PM

பேங்காக், 11 மே (பெர்னாமா) -- தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினாவத்ரா, ஓராண்டு சிறைத் தண்டனையில், பேங்காக்கில் உள்ள க்ளோங் ப்ரேம் மத்திய சிறையில் எட்டு மாதங்களைக் கழித்தப் பின்னர், நன்னடத்தை அடிப்படையில் நிபந்தனையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

தக்சின் இன்று காலை மணி 7.45 அளவில், பேங்காக்கின் சதுசாக் மாவட்டத்தில் உள்ள சிறை நுழைவாயிலிலிருந்து வெளியேறினார்.

தக்சின் காலை மணி 8 அளவில் தனது குடும்ப வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார்.

76 வயதான அந்த கோடீஸ்வரர், ஊழல் தொடர்பான குற்றங்களுக்காக விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனையைக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அனுபவிக்கத் தொடங்கினார்.

மேலும், அந்த காலக்கட்டம் முழுவதும் அவர் மின்னியல் கண்காணிப்புக் கருவியை அணிய வேண்டும்.

செப்டம்பர் 9-ஆம் தேதி வரையில், அவர் அனுமதியின்றி தனது இல்லத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை.

சிறையிலிருந்து விடுதலையானப் பிறகு, தக்சின் கண்காணிப்புக் கருவி மற்றும் பரோல் தொடர்பான அறிக்கை தேவைகளை நிறைவு செய்வதற்காக, பேங்காக் நொய் மாவட்டத்தில் உள்ள பேங்காக் நன்னடத்தை அலுவலகம் 1-இல் அவர் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தக்சின்னின் வயது மற்றும் உடல்நிலையையும், அவர் தனது தண்டனைக் காலத்தின் எட்டு மாதங்களைச் சிறையில் கழித்ததை அடிப்படையாகக் கொண்டும், ஏப்ரல் மாதம், தாய்லாந்தின் சீர்திருத்தத் துறை அவரின் பரோல் விடுதலையை அறிவித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)