Ad Banner
 பொது

டோல் சாவடியில் அநாகரீகம்; ஆடவருக்கு 100 ரிங்கிட் அபராதம்

11/02/2026 06:21 PM

ஷா ஆலம், 11 பிப்ரவரி (பெர்னாமா) -- கடந்த சனிக்கிழமை, டாமன்சாரா - பூச்சோங் நெடுஞ்சாலை, எல்.டி.பி டோல் சாவடியில் வாகனம் ஒன்றின் மீது போக்குவரத்து கூம்பை விட்டெறிந்த ஆடவருக்கு, ஷா ஆலம் மஜிஸ்திரேட் நீதிமன்றம் 100 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.

ஒரு வெளிநாட்டு ஆடவரிடம், தகாத மொழியைப் பயன்படுத்தி அநாகரீகமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டை லாரி ஓட்டுநரான கே. கண்பதி ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, மஜிஸ்திரேட் முஹமட் ஷாஃபிக் சுலைமான் அத்தண்டனையை விதித்தார். 

எல்.டி.பி டோல் சாவடியில் மாலை மணி 5.25 அளவில் 54 வயதான Daniel Owen Flower என்பவரை அவமானப்படுத்தும் நோக்கத்தில் கோபத்தை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்கு நோக்கத்துடன் கணபதி அச்செயலைச் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

1955-ஆம் ஆண்டு சிறு குற்றங்கள் சட்டம், செக்‌ஷன் 14-கின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டதால் அதிகபட்சம் 100 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

அந்நபர் விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்திவிட்டார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]