பாப்பார், 07 பிப்ரவரி (பெர்னாமா) -- அதிக அளவிலான இறக்குமதி பொருள்கள் மற்றும் சமூக பயண கடப்பிதழை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான பிரச்சனைகள், நிதி அமைச்சு தலைமையிலான சிறப்புக் செயற்குழுவின் விதிமுறைகளில் சேர்க்கப்பட வேண்டும் என்று உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, கே.பி.டி.என் பரிந்துரைத்துள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள், பி.எம்.கே.எஸ்-இன் சிரமங்கள், விரிவாகக் கையாளப்படுவதை உறுதி செய்வதற்காக, கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சரவைக்குப் பிந்தைய கூட்டத்தில் இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டதாக கே.பி.டி.என் அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமட் அலி தெரிவித்தார்.
மின்னியல் வணிக தளங்கள், வெளிநாட்டு மற்றும் உள்ளூர் முதலீட்டாளர்களின் இறக்குமதி நடவடிக்கைகள் உட்பட, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் உள்ளூர் சந்தைகளில் அதிகரிப்பதால், அவை உள்நாட்டு பொருள்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
"மிக முக்கியமாக, இந்த வளர்ச்சி உள்ளூர் பி.கே.எம்.எஸ்-க்கு வாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு, பாப்பார் மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது," என்றார் அவர்.
சனிக்கிழமை, பாப்பாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அர்மிசான் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)