பண்டார் தாசெக் செலாத்தான், பிப்ரவரி 03 (பெர்னாமா) -- கோலாலம்பூர் டத்தோ பண்டார் பதவி உட்பட ஊராட்சி தேர்தல்களைச் செயல்படுத்தும் திட்டம் வெறும் ஆய்வு மட்டுமே என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் விவரித்திருக்கிறார்.
மேலும், இவ்விவகாரம் விவாதத்திற்கு உட்பட்டதாக இருக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
''இது ஓர் ஆய்வு மட்டுமே. எனவே, அதன் நன்மை தீமைகளைப் பற்றி விவாதிப்போம். அதன் நன்மை மற்றும் தீமைகள். இவ்விவகாரத்தைப் பெரிதாக்க வேண்டாம். ஏனென்றால் இன்னும் செயல்படுத்தவில்லை. இது டி.பி.கே.எல் மட்டத்தில் ஓர் ஆய்வு மட்டுமே'', என்றார் அந்தோணி லோக்.
டத்தோ பண்டாரைத் தேர்ந்தெடுக்கும் விவகாரம் புதிதல்ல. மாறாக, உள்ளூர் நிர்வாகத்தின் பொறுப்புணர்வை அதிகரிக்கும் முயற்சியாகப் பல நாடுகளில் அது நடைமுறையில் உள்ளதாக அவர் மேலும் விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)