புத்ராஜெயா, 30 ஜூன் (பெர்னாமா) -- கோத்தா மடானி வெறும் வீட்டுவசதித் திட்டம் மட்டுமல்ல என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.
மாறாக அத்திட்டம் அரசாங்க ஊழியர்களுக்குத் தரமான வாழ்க்கைச் சூழலை வழங்குவதற்கான ஒரு விரிவான அணுகுமுறையாகும் என்று அவர் கூறுகிறார்.
அரசாங்க வீடுகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டது என்றும், முதல் கட்டத்தில் 3,000 வீடுகளும், அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டத்தில் 10,000 வீடுகளும் கட்டி முடிக்கப்படும் என்றும் அன்வார் இப்ராஹிம் விவரித்தார்.
''சாதாரண வீடு போன்று அல்லாமல், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும். அவர்களுக்குச் சௌகரியம் கொடுப்போம். பள்ளி, மசூதி, உடற்பயிற்சி கூடம், விளையாட்டு மைதானம், பசுமை. அனைத்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஒரு நவீன, நாகரிக நகரம்,'' என்று அவர் கூறினார்.
அரசு ஊழியர்களுக்கான வீடுகள் பற்றாக்குறை பிரச்சினையைச் சமாளிக்கவும், மடானி அடிப்படையில் நவீன நகர்ப்புற மேம்பாட்டை அறிமுகப்படுத்தவும் இத்திட்டம் வரையப்பட்டுள்ளது என்று அவர் விளக்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)