பெர்த், 25 ஜூன் (பெர்னாமா) -- ஆஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்ட குவாண்டஸ் ஏர்வேஸ் விமானம் சுமார் 15 மணிநேர பயணத்திற்குப் பிறகு நாடு திரும்பியது.
வழக்கமான 17 மணிநேர பயணத்துடன், பெர்த்திலிருந்து பிரான்ஸை நோக்கி போயிங் 787 ஜெட் விமானம் புறப்பட்டது.
ஈரான் மேற்கொள்ளும் ஏவுகணைத் தாக்குதலின் காரணமாக மத்திய கிழக்கு வான்வெளியின் பல பகுதிகள் மூடப்பட்டது.
ஏவுகணைத் தாக்குதல் குறித்து விமான நிறுவனத்திற்குத் தெரிவிக்கப்பட்டபோது, சம்பந்தப்பட்ட அவ்விமானம் வான்வெளியின் தென்மேற்கு எல்லை வரை சென்றிருந்தது.
எனினும், அறிவிப்பைத் தொடர்ந்து திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், சுமார் 15 மணிநேர பயணத்திற்குப் பிறகு மேற்கு ஆஸ்திரேலிய தலைநகரில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
இதனிடையே, பெர்த்திலிருந்து லண்டன், ஹீத்ரோ விமான நிலையத்தை நோக்கிச் சென்ற மற்றொரு குவாண்டஸ் விமானமும் பாதிக்கப்பட்டு, சிங்கப்பூருக்குத் திரும்பியதாக, குவாண்டஸ் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)