கோலாலம்பூர், 7 ஜூன் (பெர்னாமா) -- தியாகத் திருநாளை முன்னிட்டு செய்யப்படும் இறைத் தியாகச் சடங்கு, மதக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்கள் உட்பட மக்களிடையேயான உறவை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்துகிறது.
பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்களிடையே ஒருமைப்பாட்டு உணர்வை வெளிப்படுத்துவதோடு, உறவை வலுப்படுத்தவும் இச்சடங்கு வழிவகுப்பதாகத் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
''இந்தத் தியாகச் சடங்கை நிறைவேற்ற, சிறுவர்கள், ஆர்.டி.எம் மற்றும் இப்தார் ஊழியர்களின் வருகையினால் இவ்விடம் களைக்கட்டியுள்ளதை நான் காண்கிறேன். இது போன்ற முயற்சிகள் நம் நட்பைத் தொடர்ந்து வலுப்படுத்தும் என்று நாம் நம்புகிறேன்,'' என்று அவர் கூறினார்.
சனிக்கிழமை அங்கசாபுரியில் உள்ள முஹம்மடி பள்ளிவாசலில் ஆ.டி.எம் ஏற்பாட்டிலான தியாகத் திருநாள் கொண்டாட்டத்தின்போது டத்தோ ஃபஹ்மி செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)